Ads Here

Sunday 19 September 2021

*நடந்து முடிந்த மறுமை நாளின் அடையாளங்களில் சில*

```Islamic culture```

💚🪄❤️🪄💚

~_*السلام عليكم ورحمة الله وبركاته.*_

                                           
                                                                    

  🎙️ அல்லாஹ்வின் தூதர் நபி _(ஸல்)_ அவர்கள் மறுமை நாள் வருவதற்கு முன்பாக இது நடக்கும் என்று கூறினார்கள். இதில் பெரும்பாலானவை நடந்து விட்டது.அவைகள் என்னா..??

🎙️ புகாரி என்ற நபிமொழித் தொகுப்பிலே 7121 இல் அல்லாஹ்வின் தூதர் நபி _(ஸல்)_  அவர்கள் கூறுகின்றார்கள். *நில நடுக்கங்கள் அதிகமாகும் என்று*.
இன்றைய காலகட்டத்தில் நாம் அதை கண்கூடாக பார்த்து வருகின்றோம். மேலும் காலங்கள் சுருங்கும் என்றும் அல்லாஹ்வுடைய தூதர் கூறுகின்றார்கள். இன்று அதையும் நாம் அனுபவித்து  வருகின்றோம்.சென்ற வருடம்,சென்ற மாதம் அதற்குள் முடிந்து விட்டது என்று நாம் பல நபர்கள் கூறக்கூடிய நம் வாழ்க்கையிலே நடக்கக் கூடிய விசயங்களாக இந்தக் காலம் சுருங்கி இருக்கிறது.

அதே போல குழப்பங்கள் தோன்றி கொலை பெருகாத வரை மறுமை நாள் ஏற்படாது என்று நபியவர்கள் கூறினார்கள். இந்தக் கட்டத்தையும் நாம் பார்த்து வருகின்றோம். இன்றைய காலகட்டத்திலே குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு அதனால் கொலைகள் நடக்கப்படுகிறது.

அடுத்ததாக கணவன்,மனைவி கள்ள உறவுகளால் அங்கே கொலைகள் நடத்தப்படுகின்றன.

பணத்திற்காகவும், பொருளுக்காகவும், செல்வத்திற்காகவும், சொத்திற்காகவும் இப்டியான பல குழப்பங்களுக்கு மத்தியில் கொலைகள் பெருகி இருக்கிறது.இன்றைய 📄 பத்திரிகைகளை புரட்டினால், 📺 டீவியை பார்த்தால் நமக்குத் தெரியும் செய்திகளே வரக்கூடிய உண்மைகள்.

அடுத்ததாக மக்கள் கட்டிடங்களை போட்டி போட்டுக் கொண்டு உயரமாக கட்டிடங்களைக் கட்டாத வரை மறுமை நாள் ஏற்படாது என்று அல்லாஹ்வுடைய தூதர் நபி _(ஸல்)_ அவர்கள் கூறுகின்றார்கள்.

இன்றைய கால கட்டத்திலே ஒரு நபர் அவருடைய வீட்டை அதிகமான உயரத்திலே வீடு கட்டிவிட்டால் நாமும் அதை விட அதிகமாக பெரிதாக வீடு கட்ட வேண்டும் என்று மக்கள் போட்டி போட்டுக் கொண்டு கட்டிடங்களை வீடுகளை அமைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதையும் நாம் கண்கூடாக பார்த்து வருகின்றோம்.

ஒரு மனிதன் மற்றொரு மனிதன் மண்ணறையை கடந்து செல்லும் போது அந்தோ நான் இவனுடைய இடத்தில் இந்த மண்ணறைக்குள் இருக்கக் கூடாதா..? என்று ஏக்கத்துடன் கூடாதவரை மறுமை நாள் ஏற்படாது என்று நபியவர்கள் சொன்னார்கள். மேலும் மரணித்து இருக்கக் கூடாதா என்று சிந்திக்கக் கூடிய அளவிற்கு அதிகமான மக்கள் இருப்பார்கள். இக் கால கட்டத்தில் ஏராலமான நபர்கள் அப்படித்தான்.ஒரு சில பிரச்சினைகள் நடந்தால் எனக்கு மரணம் நிகழக்கூடாதா என்றெல்லாம் நினைக்கக் கூடிய மக்கள் அதிகமாக இருக்கின்றார்கள். அதையும் அல்லாஹ்வுடைய தூதர் நபி _(ஸல்)_ அவர்கள் சொல்கின்றார்கள். இன்றைய கால கட்டத்தில் அதுவும் நடந்து கொண்டிருக்கிறது.

🎙️ மேலும் புகாரியிலே 50 வது ஹதீஸாக இடம் பெறுகின்றது.

*ஒரு பெண் தனது எஜமானியை பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்று நபியவர்கள் சொன்னார்கள்.*
ஒரு பெண் தனது எஜமானியை பெற்றெடுத்தால் இன்றைய காலகட்டத்திலே தாய்மார்கள் பெண் பிள்ளைகளுடைய வீட்டிலே ஒரு சூழலை நாம் பார்த்து வருகின்றோம். ஆண்களெல்லாம் கைவிடப்பட்டு, ஆண் குழந்தைகளெல்லாம் கைவிடப்பட்டு பெண்கள் இருக்கக் கூடிய அவர்களின் வீட்டில் தான் தாய்மார்கள் இருந்து விடுகிறார்கள். இதைத்தான் அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள். இதுவும் இக் காலகட்டத்தில் நடக்கின்றது.

🎙️ மேலும் புகாரியிலே 5231 வது ஹதீஸாக இடம் பெறுகின்றது.

*அறியாமை மழிந்து விடுவதும், கல்வி அகற்றப்பட்டு விடுவதும், விபச்சாரம் அதிகரித்து விடுவதும், மது அருந்துதல் அதிகரித்து விடுவதும் மறுமை நாளின் அடையாளங்களில் அடங்கும் என்று நபியவர்கள் கூறினார்கள்*.
இதுவும் இன்றைய கால கட்டத்தில் நடந்து கொண்டு இருக்கின்றது.

✨ அருமை சகோதர சகோதரிகளே..!!
மறுமை நாள் நெருங்கி விட்டது. ஆக அல்லாஹ்விடம் தொளபா செய்து பாவத்திலிருந்து மீழுங்கள்.

*இப்படிக்கு அல்லாஹ்வின் அடியான்* :- ~_*أبو عياش*_~ ✍️

No comments:

Post a Comment